திங்கள், 7 அக்டோபர், 2013
செவ்வாய், 29 ஜனவரி, 2013
கைலாசபதி பற்றி மீள்பார்வை லெனின் மதிவானம்
பேராசிரியர் கைலாசபதி மறைந்து
முப்பது ஆண்டுகள் கடந்து விட்டன.
இந்நிலையில் அவர் பொறுத்து எதிர்பார்த்த வகையில் ஆக்கப்பூர்வமானஆய்வுகள்;
வரவில்லையாயினும்,
சில
குறிப்பிடத்தக்க ஆய்வுகள், மதிப்பீடுகள், வாழ்க்கைக்
குறிப்புகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு குறிப்பிடத்தக்க கட்டுரைகள், நூல்களில்
பெரும்பாலானவைமார்க்சியமுற்போக்காளர்களினால் எழுதப்பட்டவையேயாகும். கைலாசபதியின்
வரலாற்று முக்கியத்துவத்தையும் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் இயக்கவியல் போக்குகளை
அவர் இனங்கண்டு கொண்ட முறையினையும் சமூகவியல் அடிப்படையில் நோக்கியவர்கள்
மேற்கூறியவர்களே. அத்தகைய ஆராய்ச்சிகளை சிறப்பாக முன்னெடுத்தவர்களில் ந.
இரவீந்திரன் குறிப்பிடத்தக்கவர். அவரது எழுத்துக்கள் வரலாற்றையும் பண்பாட்டையும்
மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்பவை. கைலாசபதியின் இலக்கிய பங்களிப்பு பற்றி அவர்
எழுதி முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடான இந்நூல், மார்க்சிய
நோக்கில் கைலாசபதியின் இலக்கிய நோக்கினையும் பங்களிப்பினையும் புரிந்தக்
கொள்வதற்கு பெரும் துணையாக அமையும் என எதிர்பார்க்கலாம். குறுகிய வரம்புகளை கடந்து
தேசிய சர்வதேச அடிப்படையில் அணுகும் போதே இவ்வகையான ஆளுமைகள் பொறுத்த ஆய்வுகள்
அர்த்த முள்ளவையாக உள்ளன.
காலத்தின் போக்குகளும்
நோக்குகளும் இலக்கிய விசாரத்தை பாதிக்க கூடியது என்ற வகையில் கைலாசபதி பற்றிய
மீள்பார்வை செய்கின்ற போது இதுவரை வந்த ஆய்வுகள் பற்றிய தெளிவு அவசியமாதாகும்.
அந்தவகையில் கடந்த காலங்களிங்களில் இடம்பெற்ற கைலாசபதி பற்றிய ஆய்வுகளை மூன்று பெரும் பிரிவுக்குள்
அடக்க கூடியவையாக உள்ளன.
முதலாவது பிரிவினர் கைலாபதியன்
ஆய்வுகளுக்கு எதிர் வினைப் புரிவோர். இவர்களை இரு கோணங்களில் அவதானிக்க கூடியதாக
இருக்கின்றது. ஓன்று தலைக்குணிய வேண்டிய தனிமனித சண்டைகள் தாழ்வு மனப்பாங்கு-
பொறாமையுணர்வு, எழுத்தாளரை தனிமைப்படுத்தி தாழ்வு நிலைக்கு கொண்ட செல்லும் குழ
மனப்பாங்கு என்பன இவர்களின் எதிர்வினைகளில்; முனைப்புற்றிருந்தது.
இப்போக்கிற்கு எடுத்தக்காட்டாக எஸ். பொவின் கைலாசபதி பற்றிய மதிப்பீடுகளைக் குறிப்பிடலாம்.
இந்த போக்கில் கால் பதித்து கைலாபதியை தாக்குகின்ற மதிப்பிடுகளை செய்து வருகின்ற
பிறிதொருவர் நட்சத்திர செவ்விந்தியன். தேசம் நெற்டில் கைலாசபதி பற்றி இவர் எழுதிய
குறிப்புகள் இதனை உறுதி செய்வதாக அமைந்திருக்கின்றன. நட்சத்திர செவ்விந்தியன்
முற்போக்கு இலக்கியத்தை ஏற்க முடியாத நிலையிலும் - அதனை விளங்கிக் கொள்ள முடியாத
நிலையில் இத்தகைய தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றார். முற்போக்கு மார்சிய
இலக்கியங்கள் மீது இத்தகைய தாக்குதல்களை நடாத்தி வருகின்ற இவர்களது எதிர்வினைகளில்
ஆத்திரம், ஆபாசம், அங்லாய்ப்பு, ஆற்றலின்மை
முதலிய அம்சங்களே இவ்வணியினரின் எழுத்திகளின்; முத்திரைகளாகியிருக்கின்றன.
இப்பிரிவினுள் உள்ளடக்கத்தக்க
இன்னொரு அணியினர், கைலாசபதி வரித்திருந்த மார்க்சிய தத்துவார்த்தத்தின் மீது
எதிர்வினைப் புரிகின்றவர்கள். அத்தகையவர்களில் முக்கியமானர் மு. தளையசிங்கம். இவர்
மார்க்சியத்தையும் அது சார்ந்த அறிஞர்களையும் ஆன்மீக- கருத்தியல் தளத்தில்
நின்றுக் கொண்டு விமர்சிப்பவர்;. இவ்வாறே கைலாசபதியின் மார்க்சிய
பார்வையின் மீது கடும் விமர்சனத்தை முன் வைத்தவர்களில் வெங்கட்சாமிநாதன்;. பொதுவாகவே
இவரது கருத்துக்களை ஊன்றிக் கவனிக்கின்ற போது மார்க்சிய எதிர்ப்பு அவரது
எழுத்துக்களில் வேரோடியிருப்பதனைக் காணலாம். இத்தகைய மார்க்சிய எதிர்ப்பு தளத்தில்;
நின்றுக்
கொண்டே கைலாசபதி மீதான தாக்குதலைகளை நடாத்துகின்றார்.
இவ்வகையில் இத்தகையோரின் எதிர்
வினைகள் கைலாபதி சார்ந்திருந்த மார்க்சிய பார்வையின் மீதானதாகவே அமைந்திருந்தன.
இலக்கியத்தில் “மார்க்சியம்”
“முற்போக்கு”
என்ற
சொற்களை கேட்டாலே ஒரு வித அலர்ஜி கொள்ளும் வெ.சா வின் எழுத்துக்களில் எப்போதும்
ஒரு வாசகனை சஞ்சலப்படுத்தும் அம்சங்களே முனைப்பு பெற்று காணப்படுவதை அவரது
எழுத்துக்களை நுணிந்து நோக்குபவர்களால் புரிந்துக் கொள்ள முடியும். அந்தவகையில்
கைலாசபதியின் தமிழ் நாவலிலக்கியம் என்ற நூல் பற்றிய அவரது கட்டுரை
அவதானத்திற்குரியது கொள்ளத்தக்கது. “மார்க்சின் கல்லறையிலிருந்து ஒரு
குரல்” என்ற அக்கட்டுரை அவரது ஓர் எதிர்ப்புக் குரல் (காலத்தின்
அங்கிகாரத்தை எதிர்நோக்கி),(1978) என்ற நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.
அக்கட்டுரையில் பின்வரும் பந்தி
கவனத்திற்குரியது:
“இப்பார்வை (கைலாசபதியின்
பார்வை-கட்டுரையசியர்) மார்க்ஸியத்தின் பிறழ்ச்சி. இலக்கியத்திற்கும், கலைக்கும்
சம்பந்தமில்லாத ஒரு அரசியல் பார்வை. அதிலும் ஒரு மனித அதிகாரம், அரசியலாகி
விட்ட நிலையில் பிறந்த அரசியல் பார்வை.…
கலாநிதி க. கைலாபதி, M.A.,
Ph.D
யின் ‘தமிழ்
நாவல் இலக்கியம்’ இத்தகைய அரசியல் பார்வையில் பிறந்த ஒரு கல்லறைக் குரல்”
எனக் குறிப்பிடும் வெ.சா, கைலாசபதியின்
ஆய்வுகள் யாவும் மார்க்சிய வயப்பட்டவை எனவும் சில இடங்களில் அதுவும் போதாமையாக
காணப்படுகின்றது எனவும் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறே கைலாசபதியின் முற்போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சனைகளும் என்ற
கட்டுரை வெளிவந்த காலத்தில் அக்கட்டுரை எதிர் முகாமினரால் கடுமையான
தாக்குதல்களுக்கு உட்பட்டது. அ. யேசுராசா அலை 13 இதழில்(1980
பங்குனி) ‘குருவை மிஞ்சிய சீடப்பிள்ளை’ என்ற கட்டுரை
ஆய்வாளர்களின கவனத்தைப்பெற்றிருந்தது.
அடிப்படையில்; இவர்களின் விமர்சனங்கள் என்பது கைலாசபதியின் கோட்பாட்டிற்கான எதிர்வினை என்பதை
விட கைலாசபதியை கொச்சைப்படுத்துகின்ற
முயற்சிகளாகவே காணப்பட்டன. இலக்கியத்தில் அரசியல் வேண்டாம் என கூறும் இவர்களின்
கூற்றில்; தமக்கு வேண்டாத அரசியலை நிராகரிப்பதாகவே அமைந்திருந்தது.
அந்தவகையில் சமூகமாற்றத்திற்கான அரசியலும் எழுத்தாளர்களும் படைப்புகளும்
நிராகரிக்கப் பட வேண்டும் என்ற கபடமே இவர்களின் அடிப்படையாக அமைந்திருந்தது.
மேலும் முற்போக்கு, மார்க்சிய இலக்கியத்தின் முனைப்பான முக்கியமான எதிரியாக இருந்த
க.நா.சு, மு.தளையசிங்கம் போன்றோரில் அழகியல் பார்வை எவ்வாறு
ஆன்மீகத்துடன் இணைந்து காணப்பட்டது என்பதனையும் அது எவ்வாறு பொது மக்கள் விரோத
பார்வையை முன்னிறுத்தியது என்பதையும் கைலாபதி மிகச் சிறப்பாகவே எடுத்துக்
காட்டியுள்ளார். தற்காலத்தில்; க.நா.சு, மு.த
முதலானோரின் பார்வையின் இன்னொரு தொடர்ச்சியாகவே ஜெயமோகனின் எழுத்துக்கள்
அமைந்திருக்கின்றன. கைலாசபதி பற்றி ஜெயமோகனின் தாக்குதல்களும் இந்தப் பின்னணியில்
வைத்து நோக்கத் தக்கனவே. ஆக கைலாசபதி பற்றிய வெங்கட்சாமிநாதனின் விமர்சனத்தை
பலகோணங்களிலிருந்து விமர்சனத்திற்குட்படுத்திய எம்.ஏ. நுஃமான் “இந்நூல்(தமிழ்
நாவல் இலக்கியம்) பற்றிய சாமிநாதனின் விமர்சனம் கல்லறையை நோக்கி சென்றுக்
கொண்டிருக்கும் ஒரு பிற்போக்கு அரசியல் சித்தாந்த்தின் அவலக் குரலே தவிர
வேறோன்றுமில்லை”. என மிகப் பொறுத்தமாகவே சுட்டிக்காட்டுகின்றார். இவ்வரையறை
வெ.சாவிற்கு மாத்திரமன்று பொதுவாக இவ்வணியினருக்கு முற்று முழுதாக பொருந்தக்
கூடியவையாகவே அமைந்திருக்கின்றது.
இரண்டாவது பிரிவினர் கைலாசபதியை
சமூகவுணர்வுடனும் கரிசனையுடனும் நோக்கி அவரது பங்களிப்புகளை
வெளிக்கொணர்ந்துள்ளனர். அத்தகையோரில் ஒரு பிரிவினர், கைலாசபதியின் வாழ்க்கையiயும்,
எழுத்துக்களையும்
அவரது உலகநோக்கையும் முழுமையான ஆய்வுக்குரியனவாக கருதி பல அம்சங்களை
வெளிக்கொணர்ந்துள்ளனர். அவ்வாறு வெளி வந்திருக்கும் ஆய்வுகள் விரல்விட்டு எண்ணக் கூடியவையாகவே
உள்ளன. ஆராய்ச்சி பூர்வமான வாழ்க்கை வரலாறு இதுவரை எழுதப்படவில்லை என்பது
இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கதொன்றாகும். இருப்பினும் இத்துறையிலான தகவல்களையும்
வாழ்க்கை செய்திகளையும் ஆய்வுத் துறைச் சார்ந்த பங்களிப்புகளையும் முற்போக்கு மார்சியம்
ஆகிய இருதளங்களில் இருந்தும் வெளிக் கொணர்ந்துள்ளனர். முற்போக்கு தளத்தில் நின்று
இத்தகைய ஆய்வுகளை வெளிக் கொணர்ந்ததில் இராம. சுந்தரத்தின் கலாநிதி.க. கைலாசபதி
என்ற நூல் முக்கியமானதாகும். கைலாபதி பற்றிய பல தகவல்களையும் பதிவுகளையும்
தருகின்ற இந்நூலில் கைலாபதியின் ஆய்வு பங்களிப்பு சிறந்த முறையில் வெளிக்
கொணரப்படுகின்றது. இவ்வாறே கைலாபதி பற்றிய ஆரோக்கியமான தகவல்களையும் கைலாசபதியின்
ஆய்வு முக்கியத்துவத்தையும் கூடவே கே. எஸ். சிவகுமாரன் போன்றோரின் எழுத்து
முயற்சிகளுக்கு கைலாபதி எவ்வாறு உந்து சக்தியாக இருந்துள்ளார் என்பதை எமக்கு
எடுத்துக் காட்டுகின்ற பிறிதொரு நூல் கே. எஸ் சிவகுமாரன் எழுதிய “கைலாசபதியும்
நானும்”(1990, தமிழ் மனறம்,கண்டி). இருப்பினும் கே. எஸ்
சிவகுமாரன் கைலாசபதியின் க.நா.சு பற்றிய
ஆய்வுக் குறித்தும் ஆழகியல் பார்வைக் குறித்தும் முரன்பாடான கருத்துக்களையே முன்
வைக்கின்றார். இவை யாவும் கைலாசபதியின் திறனாய்வு குறைப்பாடாக சுட்டிக்
காட்டுகின்றார். இலக்கிய உலகில் கைலாபதியை முன்னிறுத்தி ஒரு முக்கிமான சர்ச்சை
நடப்பதன்டு. உருவமா-உள்ளடக்கமா என்ற அடிப்படையிலே அவ்வாதப் பிரதிவாதங்கள்
நடக்கின்றது. எண்பதுகளில் க.நா.சு அழகியலை வலியுறுத்தியவர் என்றும் அதற்கு நேர்
எதிர்மாறாக கைலாசபதி இலக்கியத்தில் பிரச்சாரத்தை வலியறுத்தியவர் என்றும்
கைலாசபதியை எதிர்ப்பவர்களால் மட்டுமல்ல அவரது ஆய்வுப் பங்களிப்பை ஏற்பவர்களும்
வலியுறுத்தப்பட்டு வந்ததுள்ளது. இலக்கியத்தில் உள்ளடக்கமா உருவகமா என்ற வீன்
வாதத்தில் இறங்காமல் இரண்டும் இயைபுப்பட்டே சிறந்த இலக்கியம் தோன்ற முடியும்
என்பதையும் இலக்கியத்தில் உள்ளடக்கம் எவ்வாறு வர்க்கச் சார்புக் கொண்டதோ அவ்வாறே
அழகியலும் வர்க்கச் சார்பு கொண்டது என்பதை மிகத் தெளிவாகவே கைலாசபதி
வலியுறுத்தியிருக்கின்றார். இத்தகைய சமூதாய கொள்கையை புரிந்துக் கொள்ளத்
தவறியமையினாலேயே கே. எஸ். சிவகுமாரன் போன்றோர் கைலாசபதி மீதான அத்தகைய
விமர்சனங்களை முன் வைக்கின்றனர். முற்போக்கு தளத்தில் நின்று கைலாசபதியின் பன்முக
ஆளுமையை வெளிக் கொணர்வதில கவிஞர். இ. முருகையன பேராசிரியர்கள் சு. வித்தியானந்தன்,
சபா
ஜெயராசா, க. அருணாசலம், செ.யோகராசா, எஸ்.சிவலிங்கராஜா,
திருவாளர்கள்.
ந. தெய்வசுந்தரம், தி.க. சிவசங்கரன், வல்லிக்கண்ணன், அசோகமித்திரன்
பிரேம்ஜி,ஆ; முகமது சமீம், தெணியான், கலாநிதிகள்
துரைமனோகரன், வ. மகேஸ்வரன், பாலசுமார் முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
கைலாசபதியின் வாழ்க்கையை
ஆராய்ந்து நிறுவும் வாழ்க்கை வரலாற்று நூல்களும் சில தோன்றியிருக்கின்றன.
கைலாசபதியை அறிந்தவர்கள் அறிந்தவர்கள் நெருங்கிய நண்பர்கள் அபிமானிகள் என்போரால்
எழுதப்பட்ட நூல்கள் சுவையுடையனவாகவும் பயன் தருகின்றனவாகவும் அமைந்திருக்கின்றன.
இவற்றின் மூலமாகவே கைலாசபதியின் அருமையையும், ஆய்வுத்திறனையும்
ஈடுபாடுகளையும் நாம் தெரிந்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. அவ்வகையில் “கைலாஸ்-கைலாசபதி
நினைவேடு(1988), செ. கணேசலிங்கனின் “கைலாசபதி நினைவுகள்”(
1999) செ. சுபைர் இளங்கீரனின் “பேராசிரியர்
கைலாசபதி நினைவுகளும் கருத்துக்களும்;”;(1992) ஆகிய நூல்கள்
முக்கியமாவையாகும்.
இவ்வாறே கைலாபதி பற்றிய ஆய்வுகளை
மார்க்சிய தளத்தில் நின்று அவரது ஆய்வுகள் சமூகத்திற்கு எத்தகைய பங்களிப்புகளை
நல்கியுள்ளது எனும் விடயங்களை வெளிக்கொணர்ந்ததில் எம்.ஏ நுஃமான், சித்திரலேகா
மௌனகுரு, கோ. கேசவன், நீர்வை பொன்னையன், சி. கா செந்திவேல், சி.சிவசேகரம்,
ந.
இரவீந்திரன், லெனின் மதிவானம் முதலியோரின் பங்களிப்புகள்; குறிப்பிடத்தக்கவையாகும்.
இவ்வணியினரில் எம்.ஏ நுஃமான், சித்திரலேகா மௌனகுரு முதலானோர்
இலக்கியத்தில் அழகியல் கொள்கைப் பற்றி கொண்டிருந்த நிலைப்பாடு(வர்க்கம் கடந்த
அழகியல் கோட்பாடு), கலை
இலக்கியத்தில் அழகியகியலும் வர்க்க முரண்பாடுகளையும் மோதல்களையும் சித்திரித்து
நிற்கும் என்ற கோட்பாட்டை நிராகரிப்பதாக அமைந்தமை தற்செயல் நிகழ்ச்சியல்ல.
அண்மைகாலத்தில் எம்.ஏ நுஃமான் அவர்களின்
எழுத்துக்களில் சமூகவியல் பார்வை முனைப்புற்றிருப்பதால் அழகியல் குறித்த தெளிவான
பார்வை முன்னிறுத்தப்படுவது நமக்கான நம்பிக்கையை தருவதாகவும் அமைந்திருக்கின்றது.
அவ்வாறே மார்க்சிய தளத்தில்
நின்று கைலாபதியை ஆய்வு செய்தவர்கள் அவரது மார்க்ஸிய பார்வை தமிழியல் சூழலில் எத்தகைய
பங்களிப்புகளை வழங்கியிருக்கின்றது என்பதை சிறப்பாக எடுத்துக்காட்டியள்ளனர்.
அதேசமயம் இனக் குழு சமூகச் சூழலில் ஐரோப்பிய வர்க்க ஆய்வு முறையை அப்படியே
பிரயோகிக்க முற்பட்டமையால் நமது மண்ணுக்குரித்தான விடயங்கள் போதியளவு கவத்தில்
கொள்ளடப்படாமல் போயிவிட்டமை துரதிஸ்டவசமானதொன்றாகும்;. இந்த தவறுகள்
கைலாபதி பற்றிய வெளிவந்த மார்சிய ஆய்வுகளிலும் காணப்படுகின்றது. தமிழியல் சூழலை
கவனத்திலெடுத்து பாரதி பற்றி கைலாபதி முன்வைத்த கருத்துகளில் பாரதியின் ஆன்மீகம்
சார்ந்த பார்வை குறித்து முரண்பாடான கருத்துக்கள் சிலவற்றினை கோ.கேசவன் , அ.மார்க்ஸ்
முதலானோர் முன் வைத்துள்ளனர். இன்று காந்தி குறித்தும் அவரது ஆன்மீக பார்வை
எவ்வாறு சமூகம் சார்ந்தாக இருந்தது என்பது குறித்தும் காத்திரமான கருத்துக்களை
முன்வைக்கின்ற அ. மார்க்ஸ் இன்று பாரதியின் ஆன்மீகம் பற்றி கைலாசபதியின் பார்வையை
ஏற்பார் என எதிர்பார்க்க கூடியதொன்றே.
இன்னொரு புறத்தில், 1980
களுக்கு பின்னர் தமிழியல் சூழுலில் முனைப்புற்றிருந்த புதிய இலக்கிய கோட்பாடுகளின்
பின்னணியில் கைலாசபதி; பொறுத்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக
கைலாசபதி; வலியுறுத்திய இலக்கி கோட்பாடுகள் காலவாதியாகிவிட்டது என்ற
பார்வையை அமை;பியல்வாதிகளும் பின்நவீனத்துவவாதிகளும் முன்னிறுத்துகின்றனர்.
அவ்வாறே என்பதுகளுக்கு பின்னர் தோன்றிய உலமயமாதல் நிகழ்ச்சி தி;ட்டமானது
இன்று அதன் உச்ச நிலையை அடைந்துள்ளது. இராணுவமயமாக்கத்தின் பின்னணியில்
நிலைநிறுத்தப்பட்டு வருகின்ற அந்நிகழ்ச்சி திட்டம் கலாசார ஆக்கிரமிப்பையும்
நடாத்தி வருகின்றது. இந்தப் பின்னணியில் ஏகாதிப்பத்திய நாடுகளும் அதன் கூட்டுகளும்
ஒன்றுசேர்ந்து தமக்கு சாதகமானவகையில் இலக்கிய கோட்பாடுகளையும் செல்நெறிகளையும்
தமக்கு சாதகமான வகையில் மறுவாசிப்பு செய்துக்கொள்கின்றனர். ஏகாதிபத்திய நாடுகளின்
ஆசியையும் அருளையும் பெற்றவர்கள் இப்பணியினை சிறப்பாக செய்து வருகின்றனர்.
ஆந்தவகையில் அவர்களால் முன்வைக்கப்பட்ட அமைபியல், பின்
நவீனத்துவம் முதலிய தத்துவங்கள் சமூகமாற்றப் போராட்டத்தில் ஐக்கிய பட வேண்டிய
ஜனநாயக சக்திகளை சிதைத்து- சின்னாப்பின்னமாக்கி- தனிமைப்படுத்தி இறுதில்
படுத்தோல்வி காணவும் செய்கின்றனர்;. இவர்களால் முன்வைக்கின்ற
தலித்தியம், பெண்னியம், போன்ற இலக்கிய கோட்பாடுகளை ஊன்றிக்
கவனிக்கின்ற போது இவ்வுண்மை புலபடாமல் போகாது.
மேலும் இன்றைய உலகமயமாதல் சூழலில்
தோன்றியுள்ள அதி தீவிர புரட்சியாளர்களும்- அவர்கள் சார்ந்த அவைக்களப் புலவர்களும்
இலக்கியத்தில் யந்திரபாங்கான பார்வைகளை நிலை நிறுத்துகின்றனர். இதுவரைக் காலமும்
மனித குலம் சேகரித்து வைத்திருந்த கலாசார பண்பாட்டுக் கூறுகள் யாவற்றையும் ஆதிக்க
சக்திகளின் கலாசாரமாக நோக்கி அவற்றை நிராகரிக்கின்றனர். ஒரு காலத்தில் சமூகவியல்
பார்வையில் தடம் பதித்திருந்த வரலாற்றையும் சில நேரங்களில் கைலாசபதியின் பெயரையும்
தமக்கு சாதகமானவகையில் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆவர்களின் எழுத்துக்களையும்
செயற்பாடுகளையும் ஊன்றிக் கவனிக்கின்ற போது, அதித
தனிமனிதவாதம் வித்துவக் காய்ச்சல் போன்ற அம்சங்களே அவர்களின் முத்திரையாக
இருப்பதைக் காணலாம். இத்தகைய தளத்தில்
நின்றுக் கொண்டு கைலாசபதி சார்ந்திருந்த இலக்கிய கோட்பாடுகளை தகர்க்க முனைவது: சில
சமயங்களில் அவரை தமக்கு சாதகமானவர்களாக காட்ட அவர்கள் எடுக்கும் விழாக்கள் மிவும்
ஆபத்தானதாகும். இப்போக்கானது மக்கள் இலக்கியத்திற்கே உலை வைக்க கூடியதாகும்.
இத்தகைய பார்வைகள் நமது ஆய்வுலகின் பரிதாபகரமான நிலையையே எடுத்துக்
காட்டுகின்றது.
மூன்றாவது பிரிவினர்
நடுநிலையாய்வு, விஞ்ஞானப்பார்வை என்பன எமது ஆய்வை வளப்படுத்தும என்ற
அடிப்படையில் செயற்படுகின்றவர்கள்;. இப்பிரிவில் முக்கியமானவர்
முதன்மையானவர் ந.இரவீந்திரன். இவ்வடிப்படையை மனங் கொண்டு கடந்த சில காலங்களாக
கைலாசபதி பற்றிய கருத்துக்களை கூறிவந்திருப்பவர் ந.இரவீந்திரன். அவரது பல ஆய்வுகள்
தமிழியல் சூழலில் மார்க்சிய பிரயோகத்தின் வெளிப்பாடுகளாகவே அமைந்திருக்கின்றன.
அவ்வெழுத்துக்கள் கைலாபதியின் தொடர்ச்சியையும் அதே சமயம் அத்தகைய
முன்னோடிகளிலிருந்து வளர்ந்து செல்ல வேண்டியதன் அவசியத்தையும் கோடிட்டுக்
காட்டுகின்றது. கைலாபதியின் எழுத்துக்கள்
தோற்றம் பெற்ற சூழ்நிலை, அவற்றின்
வரலாற்றுப் பின்னணி, அவற்றின்
சமுதாய இலக்கிய முக்கியத்துவம் என்பன இந்நூலில் கவனம் செலுத்தப்படுகின்றன.
பிரச்சனைகளை நுனிந்து நோக்கி ஆராயும் வெற்றி இரவீந்திரனின் ஆய்வுகளின் அடிப்படையான
அம்சமாகும்.
அவரது இந்நூலில் கைலாசபதி இயங்கிய
ஏறத்தாள மூன்று தசாப்தங்களையும் (1953-1982)
எடுத்துக்
காட்டுகின்றார். அக்காலச் சூழலின் விளைப்பொருளான கைலாசபதி காலத்தை உருவாக்குவதில்;
அவர்
ஆற்றிய பங்களிப்பினையும், அந்த மரபு தொடர்ந்து முன்னெடுக்கப்பட
வேண்டியதன் அவசியத்தையும், அவ்வாறு முன்னெடுத்து செல்கின்ற போது
கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களையும்- விமர்சங்களையும் இந்நூலின் மூலமாக வெளிக்
கொணரப்படுகின்றது. ‘முற்போக்கு இலக்கியத்திற்கு கைலாசபதியின் பங்களிப்பு’ என்ற
தலைப்பின் கீழ் முற்போக்கு இலக்கிய வரலாற்றில் கைலாசபதி எவ்வாறு ஒரு மை கல்லாக
திகழ்ந்தார் என்ற விடயம் அறிமுகக் குறிப்புகளாக தரப்படுகின்றது. அவ்வாறே ‘ஊற்றுக்கள்;’
என்ற
தலைப்பில் அவரது சமூக-கலை இலக்கிய செயற்பாட்டின் தோற்றுவாய்க் குறித்தும்,
‘புதியபாதை’
என்ற
தலைப்பின் கீழ் அவரது இயங்காற்றலின் புத்தாக்கம், வளர்ச்சி
பற்றியும் பேசப்படுகின்றது. தொடர்து, ‘மக்கள் இலக்கியம்’ என்ற
தலைப்பில் கைலாசபதியின் உச்ச பங்களிப்பாக திகழ்கின்ற முற்போக்கு இலக்கியத்திற்கான
கோட்பாட்டு உருவாக்கம் பற்றியும், ‘புதிய பண்பாடு’ என்ற
தலைப்பில் இன்றைய சமூகமாற்றத்துக்கான முன்மயற்சிகளை கைலாபதி எவ்வாறு
ஆக்கியிருக்கழின்றார் எனும் விடயம் பற்றி பேசப்படுகின்றது. இறுதியாக நாம்
இங்கிருந்து எங்கே செல்ல வேண்டும்? ஏன்பது பற்றிய தேடலாக கைலாபதி பற்றிய
நூலாசியரின் மதிப்பீடு; அமைத்திருக்கின்றது.
ந. இரவீந்திரனின் இந்நூலுடன்
இதுவரைக் கால ஆய்வகளை நோக்குகின்ற போது கைலாபதியின் முற்போக்கு மார்க்சியம்
சார்ந்த பங்களிப்பை சமூகப்பண்பாட்டுத் தளத்தில் வெளிபடுதியதுடன் கைலாசபதியின்
ஆய்வுப் பார்வைக்கு எதிராக தோன்றிய எதிர் வினைகள் குறித்தும் நீண்ட தத்துவார்த்த
போராட்டங்களையும் நடத்ததவறவில்லை.
குறிப்பாக குறுந் தமிழ் தேசியத்தின் பின்னணியில் தோன்றிய அரசியல் முனைப்புகளில்
ஒன்று தான் தமது குழு மனப்பாங்கு காரணமாக மஹாகவியை கைலாசபதி காணத்தவறிவிட்டார்
என்ற வாதமாகும். அதனை கோட்பாட்டுத்தளத்திலிருந்து நிராகரிக்கின்றார் நூலாசிரியர.;
அன்றை
சூழலில் முனைபுற்றிருந்த தீண்டாமை வெகுசன ஒழிப்பு போராட்டத்தை முன்னெடுத்த தேசிய
ஐனநாயக- முற்போக்கு -மார்க்சிய அணியை நாடி கைலாபதி அப்பேராட்டத்தை சரியான திசையில்
முன்னெடுப்பதற்கு எத்தகைய பாத்திரத்தை வகித்தார் என்பதை தக்க ஆதாரங்களுடன்
வெளிப்படுத்தியிருக்கின்றார்;.
இந்நூலில் கவிஞர். முருகையனின் “கோபுர
வாசலும் புலைப்பாடியும்” என்ற நாடகம் பற்றிய கைலாபதியின்
விமர்சனத்தை கோடிட்டுக் காட்டுகின்றார். “இத்தகைய எழுச்சியில்(தீண்டாமை
வெகுசன போராட்டம்-கட்டுரையாளர்) கோயில் நுழைவுப் போராட்டமும் ஓர் அங்கம்: அதன்
தூண்டலிலும் அதற்கு உத்வேகம் வழங்கும் வகையிலும் “கோபுரவாசல்”
என்கிற
நாடகத்தை வடித்தார் முருகையன். நந்தனார் கதையை உளவியல் அணுகுமுறையில் அவர் நாடகப்
பொருளாக்கியிருந்தார். இதனை மையமாக்கி நந்தனார் கதையை சுந்தர மூர்த்தி நாயனார்,
நம்பியாண்டார்
நம்பி, சேக்கிழார், கோபாலகிருஷ்ண பாரதியார் போன்றோர்
வாயிலாக வளர்ந்தவாறினைப் “புலைப்பாடியும் கோபுரவாசலும்” என்ற
ஆய்வுக் கட்டுரையாக வடித்தார் கைலாஸ். இதன்வாயிலாக சாதியப்பிரச்சனைக் குறித்து
அவர் முன் வைத்த கருத்துக்கள் மார்க்சிய செல்நெறிக்கு மிகப்பெரும் பங்களிப்பாக
அமைந்தன” என்பார் நூலாசிரியர்(ப.25). அந்நாடகத்தில்
இந்திய கோயில் நிர்வாகத்தில் பிராமணர்கள் முதன்மை பெறுவது போல இலங்கையில் கோயில்
நிர்வாகத்pல் வேளாரே முதன்மை பெறுவர். எனவே இந்நாடகத்தில் வெள்ளாளக்
கோயில் முகாமையாளர் ஒருவரை பாத்திரமாக்கி அவருடனான வர்க்க மோதலை காட்டியிருக்கலாம்
என்ற கைலாபதியின் விமர்சனத்தின் நுண்ணுணர்வை இந்நூலாசிரியர் மிகச் சிறப்பாகவே
எடுத்துக்காட்டுகின்றார். அன்றைய போராட்டச்
சூழலில் வெளிப்பட்ட கைலாபதியின் எழுத்துக்கள் அப்போராட்டத்தை சரியான
திரைமார்க்கத்தில் இட்டுச் செல்வதில் எத்தகைய காத்திரமான பங்களிப்பினை
நல்கியுள்ளது என்ற விடயமும் இந்நூலில் சிறப்பாக
அடையாளப்படத்ததப்பட்டுள்ளது.
அதேசமயம், கைலாசபதியின்
சமூகவியல் பார்வையையும் பங்களிப்பையும்- சமூவியல் நோக்கில் இலக்கியத்தையும்
இயக்கத்தையும் ஆணுகும் முறையியலைக் குறிப்பிடத்தக்க வகையில் பிரதிப்பலித்து
நிற்கின்ற இந்நூல் கைலாசபதி விட்டு சென்ற இடைவெளியையும் சுட்டிக்காட்டத்தவறவில்லை.
இலங்கையில் அறுபதுகளில் சாதிய
எதிர்ப்புப் போராட்டம் தேசியத்தின் வடிவமாக இருந்தது போன்று எழுபதுகளில்
தழிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டமும் முனைப்புப் பெற்றுக் காணப்பட்டது.
இதனை தமிழ் முதலாளித்துவ சக்திகள் இனவாதத்தினுள் அழுத்திச் சென்றனர். இதன்காரணமாக
தமிழ் ஜனநாயக சக்திகள் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக இந்த அணியினை நாடவேண்டி
இருந்தனர். இடதுசாரிகள் இந்த ஜனநாயக சக்திகளை வென்றெடுக்கக் கூடியவாறு சிங்கள
மக்களுடன் ஐக்கியப்படுதல் என்ற கோசத்தின் அடுத்தபக்கமாக பேரினவாதத்திற்கு எதிராகப்
போராடுதல் என்ற அம்சத்தையும் இணைத்திருப்பார்களாயின் இந்த ஜனநாயக சத்திகளின் ஒரு
பகுதியினரை வென்றெடுத்திருக்க முடியும்(லெனின் மதிவானம், மஹாகவி பற்றிய
கைலாசபதியின் மதிப்பீடு, மூன்றாவது மனிதன்.1996)
அன்றைய சூழலில் இடதுசாரிகள்
எவ்வாறு தமிழர் சமூவமைப்பில் புரையோடி போயிருந்த சாதியத்திற்கு எதிரான
போராட்டத்தில் முக்கிய கவனமெடுத்தினரோ அவ்வாறே தமிழரசுக் கட்சியினர் பேரிவாதத்திற்கு
எதிரான முற்போக்கான சிந்தனையை கொண்டிருந்தனர். அதே சமயம,; தமது வர்க்க
நலன் காரணமாக சாதிய போரட்டத்தை புறக்கணித்தமை துரதிஸ்டவசமான நிகழ்வாகும். பின்
வந்த காலங்களில் ஒரு நசிவு தரும் அரசியல் சூழலில் தமது முற்போக்கு தன்மையை இழந்து
பிற்போக்குவாதரிகளின் கூடாரமாக அவ்வமைப்பு மாறியமை துரதிஸ்டவசமானதொன்றாகும். இந்த
இடைவெளியை நாம் கைலாபதி புரிந்துக் கொள்ள தவறியதால் சிலப்பதிகார காவியத்தை
நோக்குவதில் எத்தகைய தவறுகள் நேர்ந்தது என்பதையும் நூலாசிரியர் சிறப்பாக எடுத்துக்
காட்டுகின்றார்.
“அன்றைய வரலாற்றுப் பின்னணியில்
தமிழ்த் தேசியத்தை ஏற்காமையினால் சிலப்பதிகாரம் குறித்து நிதானமான பார்வையை
வெளிப்படுத்த இயலாததைப் போன்றே பாரதிதாசன் தமிழ் தேசியத்தை வரித்துக் கொண்டது
பற்றிக் கூற வேண்டிய இடத்தில் ‘கலாசார தேசியத்திற்கு அவர் ஆட்பட்டார்
எனக் கூறுகின்றார். இந்த ஆய்வு நிலைப்பட்ட பார்வை, சமகால தேசிய
இனப்பிரச்சனை தொடர்பாக வெளிப்பட்ட தவறான அணுகுமுறையின் பேறாகும். தமிழ்த்
தேசியத்தை முன்னெடுத்த தலைமைகளிடம் வலதுசாரிப் பிற்போக்குப் பாசிசக் குணாம்சமும்
ஏகாதிபத்தியசக்திகளுக்குக் காட்டி கொடுக்கும் ஐந்தாம் படைத் தன்மையும் இருந்தது
மெய்யாயினும், பெரும்பாலான மக்களும் ஊழியர்களும் இடதுசாரி தமிழ் தேசியத்தால்
பட்டிருக்கவல்லவர்களே. பாரதிதாசனும் கூட இடதுசாரி தமிழ் தேசியத்தின் கவியாக
திகழ்ந்தவர். மார்க்சியர்கள் அத்தகைய இடதுசாரி தமிழ் தேசியத்தை ஐக்கியப்படுத்த
ஏற்றதாக இனங்கன்று வளர்த்தெடுக்க முன்வருகையில் இனப்பிரச்சனை சரியாக அணுகவில்லை.”
கைலாசபதியின் ஆய்வுத்
தடத்தில் தன் பார்வையை பட்டைத் தீட்டிக்
கொண்ட இந்நுலாசிரியர் கைலாசபதியின் பார்வையை இன்னொரு- புதிய பண்பாட்டுச் சூழலில்
முன்னெடுத்து செல்கின்ற ஆய்வு முயற்சியின் வெளிப்பாடாகவே இவ்விமர்சனம் அமைந்திருக்கின்றது.
இதுவரை கைலாபதி பற்றி வெளிவந்த
ஆய்வுகளை ஒப்பு நோக்குகின்றபோது ஒரு விடயம் திரும்பத் திரும்ப
வலியுறுத்தப்படுவதைக் காணலாம். ஒன்று கைலாபதியை கடவுளாக்கி(ஜெயமோகன் மாடன் மோட்சம்
என்ற சிறுகதையில் ஒடுக்கப்பட்ட மக்களின் கடவுளான மாடனை மேல் நிலையாக்கம் செய்து
மந்திரங்களால் கட்டிவிடுவது போல) அவரது ஒவ்வொரு சொல்லும் வழிப்படத்தக்கவை என்று
கூப்பாடு எழுப்புவோர் ஒருப்புறத்தில் ஆர்பரித்து நிற்பதைக்காணலாம். இன்னொருபுறத்தில் கைலாசபதியின் மீதான
தாக்குதல்களின் ஊடாக மக்கள்
இலக்கியத்தையும்- அதன் கோட்பாடுகளையும்- இலக்கிய கர்த்தாக்களையும் தாக்க முனையும்
எத்தனிப்புகள். இவ்விரு ஆய்வு பார்வைகளுமே ஒரு தலைப்ட்சமானவை என்பது மட்டுமல்ல
கைலாபதியை கொச்சைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றன. இவ்வாறான நசிவு தரும் பண்பாட்டு சூழலில்,
கைலாசபதியின்
சமூகவியல் பார்வையையும் பங்களிப்பையும்- சமூவியல் நோக்கில் ஆணுகும் முறையியலைக்
குறிப்பிடத்தக்க வகையில் பிரதிப்பலித்து நிற்கின்ற இந்நூல் கைலாசபதி விட்டு சென்ற
இடைவெளியையும் சுட்டிக்காட்டத்தவறவில்லை. அந்தவகையில் கைலாசபதி பற்றி
வெளிவந்திருக்கும் ஆய்வுகளில் இந்நூலுக்கு முக்கிய இடமுண்டு.
முற்போக்கு
கலை இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்திருந்த கைலாசபதியின் முப்பதாவது நினைவுத்தின
உரையில்(2012-டிசம்பர்)
முற்போக்கு இலக்கியத்திற்கு கைலாசபதியின் பங்களிப்பு நூல் பற்றி ஆற்றிய உரை.
நன்றி இனினொரு.கொம்
செவ்வாய், 22 ஜனவரி, 2013
புதிய பண்பாட்டுத்தளம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 06- 01-2013 அன்று மாலை: 4.00 மணிக்கு.








புதிய பண்பாட்டுத்தளம் தனது கொழும்புக்கான முதற்கூட்டத்தை அண்மையில்(06.01.2013) கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபத்தில் நடாத்தியிருந்தது. அதன் அமைப்புக்குழுவில் ஒருவரான ந.இரவீந்திரன் தலைமையில் இந்தப் பகிரங்கக் கருத்தாடல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. மண்டபம் நிறைந்த உற்சாகம் மிக்க பல்வேறு தரத்தினரான பங்கேற்பாளர்கள் முன்னிலையில் மல்லியப்பூ சந்தி திலகர், சிறீதரன், பாபு ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து சபையோர் கருத்துரை இடம்பெற்றிருந்தது. முன்னதாக தலைமையுரையில் இரவீந்திரன், "பண்பாட்டில் புதிய-பழைய பண்பாடுகள் உண்டா எனக் கேட்கப்படுகிறது, அவ்வாறு உள்ளது என்பதே உண்மை. ஏற்கனவே கடவுளால் அருளப்பட்டது பண்பாடு என்கிறவர்கள் கூட பண்பாட்டின் பேரால் காலந்தோறும் ஏற்படுகிற ஒடுக்குமுறைகளும், அதனை மாற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களும் குறித்து விவாதித்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவின் கன்னட மாநிலத்தில் இளம் ஆண்களும் பெண்களும் கலந்துகொண்ட நிகழ்வொன்றினுள் அத்துமீறி நுழைந்த இந்துத்துவவாதிகள் மணமுடிக்காத ஆணும் பெண்ணும் ஒன்றுகூடி இருப்பது இந்துப்பண்பாட்டுக்கு விரோதமானது எனக்கூறிப் பலமாகத் தாக்கி, பொலீசிலும் அந்த இளைஞர் இளைஞிகளை ஒப்படைத்திருந்தனர். இன்று பெண்கள் வெளியே பணியாற்ற வேண்டியுள்ள நிலையில் இவ்வாறுபேச இயலாது எனக் கூறிய இந்துக்கள் பலரும் இந்துப் பண்பாட்டில் இடையிட்டு வந்த இதுபோன்ற மரபுப்பாரம்பரிய வழக்காறுகள் காலமாற்றத்தோடு மாறவேண்டும் என்றனர். இதுபோன்றே இஸ்லாமியப் பெண்கள் படிப்புக்கென்று கிளம்புவது தவறு எனக்கூறி முஸ்லிம் தீவிரவாதக் குழுவினால் இஸ்லாமியச் சிறுமி சுடப்பட்ட போது முஸ்லிம் நண்பர்கள், இஸ்லாம் பெண்களின் கல்வியைத் தடுக்கவில்லை என்று கருத்துரைத்து அந்தச் சிறுமியையும் கல்வியையும் புதிய பண்பாட்டு எழுச்சியையும் ஆதரித்து நின்றனர். எண்பதுகளில் இருந்து பெரியாரை முன்னிறுத்திய எதிர்ப் பண்பாடு பற்றிய அக்கறை எம்மத்தியில் மேற்கிளம்பியிருந்தது. மரபு மற்றும் எதிர் பண்பாடுகளில் ஏற்புக்குரியனவும் நிராகரிக்க வேண்டியனவும் உள்ளன. அவற்றை உழைக்கும் மக்களின் பார்வையில் மக்கள் விடுதலைத் திசைமார்க்கத்தில் முன்னேறும் மக்கள்சக்தி கையேற்றுப் புடமிட்டு தனக்கானதாக உருவாக்குவதே புதிய பண்பாடு" எனக்கூறினார்.
"இன்றைய சமூக-பண்பாட்டு நெருக்கடிகளும் செல்நெறி குறித்த தேடல்களும்" எனும் தலைப்பிலான இந்தக் கருத்தாடல் அரங்கில் மல்லியப்பூசந்தி திலகர் முதலில் தனது கருத்துரையை வழங்கினார். "மலையகப் பண்பாட்டில் கோயில்களின் பங்கு நிராகரிக்க இயலாவகையில் வளர்ந்து வருகிறது. தோட்டத் தொழிலாளர்கள் நகரக் கோவில்களில் இருந்து தூரப்பட்டு இருந்து தத்தமது தோட்டங்களின் கோயில்களை நிர்மாணிப்பதில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு கோவிலையும் கட்டிமுடிக்க ஒன்பது பத்து வருடங்களும் எண்பது லட்சத்துக்குக் குறையாத பணமும் செலவாகிறது. மாதச் சம்பளப் பணத்திலிருந்து கழித்து எடுத்து ரொக்கமாக்கித்தர நிர்வாகத்தைத் தொழிலாளர்கள் கேட்டிருப்பதால், இதன்வாயிலாகவும் தனக்கு கணிசமான காலத்துக்குப் புழங்கும் மூலதனம் ஒன்றைப் பெறும் நிர்வாகம் கோயில் கலாசாரத்தைத் தூண்டி வருகிறது. இன்னொரு வகையில் மலையக நிதர்சனம் வெளிப்படுவதில் குறைபாடு காணப்படுகிறது. ரப்பர் தோட்டத்தொழிலாளர்கள் பற்றிப் பேசப்படுவதில்லை. அந்தத் தொழில்துறை ஏற்கனவே நலிந்துபோனநிலையில் அந்தமக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் அனந்தம். இன்று தேயிலைத்தொழிலும் நலிவடைகிற நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் புறக்கணிப்புக்கு ஆளாகிறார்கள். ஏனைய பகுதிகளில் அரசியல் கட்சிகளுக்கு தொழிற்சங்கம் இருக்கும், மலையகத்தில் தொழிற்சங்கம் ஒவ்வொன்றும் கட்சிகளைக் கட்டமைத்து வேறுபட்ட அரசியல்களுக்கு போகிறார்கள் என்கிறவகையிலும் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். மலையக மக்கள் எனும்போது தோட்டத் தொழில்சார்ந்து இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தனிச் சமூகம்; ஏறக்குறைய இருநூறு ஆண்டு வரலாற்றால் தனித் தேசிய இனப் பிரிவினராகக் கணிக்கப்படுகின்றனர். இன்று புவியியல் வேறுபாடுகளுடன் கொழும்பு, வடக்கு-கிழக்கு எனப் பல்பிரதேசங்களுக்கும் சிதறியுள்ள போதிலும் மலையக மக்களாகத் தம்மை இனங்காண்கின்றனர். ஆயினும் பதிவுகளில் இந்திய வம்சாவழியினர் எனப் பதிய நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். அதனை விரும்பாமல் பலர் இலங்கைத் தமிழர் எனப் பதிகின்றனர். தமது சுய லாபத்துக்காக இந்திய வம்சாவழியினர் என்ற அடையாளத்தைக் கோருகிறவர்களும் உள்ளனர். பலதசாப்தங்களாக போராடிப்பெற்ற மலையக மக்கள் என்று அவர்கள் அனைத்து இடங்களிலும் பதிவு செய்யப்படும் உரிமைக்காக் இன்று குரல் எழுப்பவேண்டியுள்ளது" எனத் திலகர் கூறினார்.தொடந்து உரையாற்றிய சிறீதரன்(சுகு தோழர்) " இலங்கையில் சமூகப் பிரச்சனைகள் எதிர்கொள்ளப்படுகிற விதம் விரக்தியளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இதனின்றும் மீண்டு மக்கள் போராட்டங்கள் மேற்கிளம்பி வர நாம் புதிய பண்பாட்டு அணியைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்தியாவில் எந்தவொரு கொடுமைக்கும் எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதைக் காண்கிறோம். அணு உலைப் பிரச்சனையாக இருக்கலாம், சாதி ஒடுக்குமுறைத் தாக்குதலாக இருக்கலாம், சமூக அக்கறையாளர்கள் மக்களை அணிதிரட்டிப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க முடிகிறது. அண்மையில் தலைநகர் டில்லியில் ஓடும் பஸ்ஸில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி, பாதிக்கப்பட்ட பெண் இருவாரங்களின் பின்னர் இறந்துவிடக் காரணமாக இருந்த கொலைபாதகச் செயலுக்கு எதிராக இந்தியா முழுமையிலும், குறிப்பாக டில்லியில் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் கிளர்ந்து எழுந்துள்ளதைக் காண்கிறோம். பெண்மீதான இத்தகைய மிருகத்தனமான தாக்குதல்களுக்கு அவர்கள் அணியும் ஆடையைக் குறை கூறுகிறவர்கள் இருக்கிறார்கள். இந்துப் பண்பாட்டின்படி உடை அணிய வேண்டுமாம். பண்பாடு உடையில் இல்லை. மன்னர்கள் மகாராணிகள் உடைகளைப் பழைய சிற்பங்களில் பார்க்கிறோம். அப்போதெல்லாம் பெண்கள் மேலாடை அணிந்ததில்லை. ஆயினும் அப்போதெல்லாம் இவ்வளவு மிருகத்தனங்கள் இடம்பெற்றதில்லை. இப்போது எல்லாமே பணம் என்றாகி மனித உறவுகள் கொச்சைப்படுத்தப்படுகிறது. வைத்தியம், சுகாதாரம், போக்குவரத்து போன்ற சேவைத் துறைகள் முழுதாக வணிகமயப் பட்டுள்ளன. பணத்துக்காக அலையும் அவலத்தில் பண்பாடு அல்லோலகல்லோலப்பட்டுள்ளது. மாறுவது பண்பாட்டின் ஒரு தவிர்க்க இயலாத பண்பு. மனிதகுல வளர்ச்சியோடு பண்பாடும் விருத்தியடைந்து வரும். சுதந்திரமான உரையாடலைச் சாத்தியமாக்கும் புதிய பண்பாட்டுத் தளம் கட்டியெழுப்பப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதனை இந்தப் புதிய பண்பாட்டுத் தளம் நிறைவு செய்யும் என நம்புகிறேன்" என்றார் .
சிறுகதைப் படைப்பாளி கொ.பாபு "சாதி இழிவுகளைச் சுமக்கும் நோய்க்கூறுடைய சமூகமாக எமது அமைப்புமுறை நீடிக்கும் வகையில் எமது பண்பாட்டுச் சூழல் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. தொழில் மகத்துவத்தை மதிக்காமல் உடல் உழைப்பை இழிவாக நோக்கும் பழைய பண்பாடு நீடிக்கும்வரை நாம் ஒன்றுபட்ட ஒரு இனம் என்று கூறத் தகுதியற்றவர்களாகவே இருப்போம். சவரத் தொழில்புரியும் ஒரு பெரியவர் எனக்கு ஒரு விடயத்தைக் கூறினார். அந்தக்காலத்தின் மருத்துவர் என்பது உள்ளிட்ட ஐந்து பட்டங்கள் உடைய தங்களை அச்சொல்லின் இழிவு தோன்றும்வகையில் அழைப்பது கொடுமையானது என்றார். நாம் புதிய பண்பாட்டைப் படைக்கவேண்டும். புதிய பண்பாட்டுத் தளம் முன்னிறுத்துகின்ற புதிய பண்பாடு என்பது எத்தகையது என்பது கோட்பாட்டு ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். முன் முடிவுகளைத் திணிப்பாதாக அல்லாமல் சுதந்திரமான உரையாடல் அனுமதிக்கப்பட வேண்டும்; பூரணமான ஜனநாயகம் பேணப்பட வேண்டும்; விமரிசனம்-சுயவிமரிசனம் அர்த்தமுள்ளவகையில் உயிர்ப்போடு முன்னெடுக்கப்படுவது அவசியம்; மக்களையும் உழைப்பையும் போற்றும் மனப்பாங்குடனான புதிய பார்வையும் விளக்கமும் வெளிப்பட ஏற்றதான சூழலை வளர்ப்போம். இவற்றைப் புதிய பண்பாட்டுத் தளம் சாத்தியமாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
கருத்துரைகளைத் தொடர்ந்து சபையோரின் கருத்துரைக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. முன்னதாக கணேஸ், மலையகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கூறினார்; தமிழ் இனம் என்பதற்குள் அவர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்றார். பொத்துவில் சம்சூன், இந்தக்கருத்தரங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகப் பொத்துவிலில் இருந்து வந்துள்ளேன்; இந்த அமைப்புப் பற்றிப் பேட்டி ஒன்றைப் பார்த்து நானாகத் தொடர்புகொண்டேன்; முன்னர் தமிழர்-முஸ்லிம் என்ற பேதமில்லாமல் பல நண்பர்கள் எனக்கு இருந்தார்கள்; அதுபோன்ற ஒரு இணக்கமான வாழ்வைக் கட்டியெழுப்பப் புதிய பண்பாட்டுத் தளம் களம் அமைக்கும் என்பதால் சேர்ந்து உழைக்க முன்வந்திருக்கிறேன் என்றார். தினகரன் விசு கருணாநிதி இன்னமும் எங்கடை ஆட்கள் உங்கடை ஆட்கள் என்று பிரித்துப் பேசுவதை விடுத்து தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் ஓரினம் என்று ஒன்றிணைக்க இதுபோன்ற அமைப்பு பாடுபட வேண்டும் என்றார். ஞானசக்தி, இதுபோன்ற புதிய பண்பாட்டு நிகழ்வில் பெண்கள் உரையாற்ற ஏற்பாடு செய்யாமை கண்டிக்கப்பட வேண்டியதாயுள்ளது; முன்னர் ஒரு பேரனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி குறித்து போராட்டத்தை முன்னெடுத்தபோது - இது குடும்ப விடயம், பெரிதுபடுத்தாமல் விடுங்கோ என்றார்கள்; இதுவே ஆமி என்றால், தமிழுக்கு கொடுமை நேர்ந்தது என்கிறோம்; பெண் எவரால் கொடுமைக்கு உள்ளாவதையும் தகர்ப்பதற்காகப் போராடும் மனமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நடைமுறைகளை இந்த அமைப்பு முன்னெடுக்க வேண்டும் என்றார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், வெளிநாட்டிலிருந்து நண்பர்கள் வலியுறுத்திய நிலையில் இங்கு கலந்துகொண்டது பயனுள்ளதாக அமைந்தது; தமிழ்பேசும் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றிப் பேசப்பட்டது, அவை கவனிப்புக்குரியன; அதேவேளை, இன்னொன்றைக் கவனம் கொள்ளவேண்டும்; அதிக வறுமைக்கான பிரதேச சபை, மிகப்பின்னடைவான கல்வி வலயம் என்பனவாக சிங்களப் பிரதேசங்களே உள்ளன - பாலியல் தொழில், பாதாள உலக பாதிப்புகள் போன்றன விகிதாசாரத்துக்கும் மேலாக சிங்களவர்களையே அதிகம் பாதித்துள்ளன என்ற உண்மைகளையும் கவனம்கொள்ள வேண்டும் என்றார்.
முடிவுரையாக இரவீந்திரன் தொகுப்புரையை வழங்கினார். "ஏற்றத்தாழ்வுமுறை தோன்றியபோதே பெண் ஒடுக்குமுறை தொடங்கிவிட்டுள்ளது. ஐரோப்பாவில் போலன்றி இங்கு முன்னேறிய இனமரபுக்குழுவால் ஏனையவை ஒடுக்கப்படுவதாக அமைந்த சாதிமுறை இருப்பதால் பிரத்தியேகமான வரலாற்றுப்போக்கு எமக்கு உண்டு. சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான அறுபதுகள் வரையான போராட்டம் வாயிலாக இலங்கை அனுபவம் முழுச் சாதிமுறை குறித்த கற்றலுக்கு மகத்தான பங்களிப்பை வளங்கியிருந்தது. பின்னர் இன ஒடுக்குமுறையைச் சந்தித்தோம். இன்று முழு இலங்கையும் இந்திய மேலாதிக்கத்துக்கு ஆட்பட்டுள்ளது. இதற்கும் மேலாக உலக மேலாதிக்கம். ஆக, பல்வேறு தளங்களிலான போராட்டங்களை எவ்வகையில் முன்னெடுப்பது என்பது குறித்து அரசியல்-சமூக-பண்பாட்டு பேதங்கள் கடந்து சுதந்திரமாக விவாதித்து விரிந்த தளத்தில் முடிவை வந்தடைய வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் மட்டுமே சரி என்று முடங்காமல், மற்றவர் கருத்தை மதித்து பொது முடுவுக்கு வருவோம். எந்த ஒரு அமைப்பினரும் தமக்கான வெகுஜன அமைப்பக இதனை மாற்ற எத்தனிக்காமல் இங்கு முழு அளவில் இணைந்து இயங்க இயலும்" என இரவீந்திரன் குறிப்பிட்டார். அமைப்புக்குழு சார்பில் நிகழ்வின் அழைப்பாளராகவும் உள்ள லெனின் மதிவானம் நன்றியுரை வளங்கினார்.
புதிய பண்பாட்டுத் தளம் ; அங்குரார்ப்பண உரை - 13. 10. 2012 - அட்டன்
புதிய பண்பாட்டுத் தளம்
[புதிய பண்பாட்டுக்கான வெகுஜன அமைப்பு]
அங்குரார்ப்பண உரை - 13. 10. 2012 - அட்டன்

நாங்கள் வெவ்வேறு தளங்களில் செயற்படுகிறவர்களாக உள்ளோம்; அவை தம்மளவில் வெற்றிகரமாக தமது நோக்கங்களை நிறைவுசெய்ய இயலுமாயிருக்க இத்தகைய அமைப்பு ஏன் அவசியம் என்ற கேள்வி எழ இடமுண்டு. அத்தகைய அரசியல், கலை-இலக்கிய அமைப்புகளின் மக்கள் விடுதலைக் குறிக்கோளை பரந்துபட்ட பண்பாட்டு வெளியொன்றைத் தரும் வெகுஜன அமைப்பூடாக ஒன்றுபட்டுச் செயற்பட இது களம் அமைக்கிறது என்கிற வகையில் ஐக்கிய முன்னணிப் பரப்பு ஒன்றாக இந்தப் புதிய பண்பாட்டுத் தளம் அமைகிறது. அந்தவகையில் இங்கு நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் மக்கள் விடுதலையை நாடும் முற்போக்கு அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு பலம் சேர்ப்பதாக அமையுமேயன்றி அவற்றுக்குப் போட்டியானதாகவோ, எதிரானதாகவோ அமையப்போவதில்லை.
மக்கள் விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு இருந்தபோதிலும், சிறு சிறு கொள்கைக்கோட்பாடுகளின் வேறுபாடுகளினால் நாம் பிளவு பட்டுள்ளோம். இதனால் மக்கள் விரோத சக்திகள் பலம்பெற்று மக்கள்மேல் மென்மேலும் சுமைகளையும் ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறார்கள். வேறுபட்ட அமைப்புகளாகவே உள்ள வரை பொது உடன்பாடான விடயங்களிலும் சேர்ந்து இயங்க முடியாதவர்களாக இருக்கிறோம். இந்த மன இடைவெளியைக் கடக்க இந்தத் தளம் உதவும்.
இதனை முன்னின்று தொடங்குகிற தோழர்கள் சில அமைப்புகளிலிருந்து வெளியேறியவர்களாக அல்லது வெளியேற்றப்பட்டவர்களாக உள்ளோம். இப்படி ஒரு அமைப்பிலிருந்து வெளியேறியதும் அதற்கு எதிரான கடுங்கோபம் கொண்டு அதனையே முதல் எதிரியாகக் கருதிச் செயற்படுவது மரபாக இருந்துவருவதுண்டு. அந்தக் குரோதங்களுக்கு இடமளிக்காமல், நாம் நேற்றுவரை செயற்பட்டோம் என்கிற வகையில் வேறெதையும்விட அந்த அமைப்பே அதிகம் சரி என்ற தெளிவோடு நாம் உள்ளோம் என்பதனாலேயே புதிய பண்பாட்டுத் தளம் ஒன்றை உருவாக்க முனைகிறோம்; அந்த எமது முன்னாள் அமைப்புகள் எமது முதல்நிலை ஐக்கியத்துக்கு உரியன.
அமைப்புகள் சில இறுக்கமான கோட்பாடுகளில் நெகிழ்வைக் காட்ட இயலாதபோது வெளியேறுவதும்-வெளியேற்றப்படுவதும் சம்பவிக்கிறது. "நூறு பூக்கள் மலரட்டும், நூறு சிந்தனைகள் முட்டி மோதட்டும்" என்ற நிலைப்பாடு, ஆளுமை மிக்க அமைப்புகளால் முன்னெடுக்க இயலுமானது. கொள்கைத் திடமும் அரசியல் நேர்மையும் இருந்தால் நூறு சிந்தனைகள் முட்டிமோதும் களமாக அமைப்புகள் திகழ முடியும். ஏதோ சில தப்பபிப்பிராயங்களால் விலகல்கள் நேரினும், அங்கு முன்னெடுக்க இயலாமல் போன சுதந்திரமான விவாதங்களை இந்தப் புதிய பண்பாட்டுத் தளத்தில் தொடர இயலும். அந்தவகையில் எங்களில் சிலரை முன்னர் அங்கத்துவராய்க் கொண்டிருந்த அமைப்புகள் எம்மை நெருக்கமான நட்பு சக்திகளாகக் கொள்ளும்வகையிலேயே இந்த அமைப்பின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
இன்றைய நெருக்கடிமிக்க சூழலில் அமைப்புகள் ஒவ்வொன்றும் ஏதோ சில தவறுகளோடு இடர்ப்படுவனவாய் உள்ளன, அவற்றின் அரசியல்-பண்பாட்டு நிலைநின்று அந்தத் தவறுகளைக் கண்டறியவோ திருத்தவோ இயலாதிருப்பதனால் மக்கள் இயக்கங்கள் முன்னேற இயலாதனவாயுள்ளன. அந்த இடர்ப்பாட்டைத் தனியொருவர் அல்லது தனியொரு அமைப்பு தீர்க்க இயலுமாயின் எமது அமைப்புக்குத் தேவை இருந்திருக்காது. பல்வேறு சிந்தனை வளங்களை, அனுபவங்களை உடைய நாம் எல்லோரும் ஒன்றுகூடி விவாதித்து ஏற்பட்டுள்ள தடையை இனங்கண்டு தாண்டிச்செல்லும் மார்க்கத்தைக் கண்டறிய இயலும் என்பதால் இந்தத் தளம் அவசியமாகியுள்ளது. அவ்வாறு காணும் புதிய மார்க்கம் அவரவர் செயற்படும் அமைப்புக்கு உரிய வழிகாட்டலாக அமையும்.
சமூக மாற்றத்துக்கான போராட்டம் சமத்துவ சமூக (சோசலிச) அமைப்பாக்கத்தை கட்டியெழுப்புவதாக அமையவேண்டும் என்ற குறிக்கோளை முன்வைத்து ஏறத்தாழ ஒரு நூற்றாண்டை எட்டவுள்ளோம். சேர்.பொன்.அருணாசலம் ருசியப் புரட்சியை வரவேற்றவராக இருந்தார். "கிருத யுகம் எழுக" என்ற பாரதியை முன்னிறுத்தி ஐம்பதாம் ஆண்டுகளில் எழுச்சியுற்ற முற்போக்கு இயக்கம் சாதியத் தகர்ப்பு மற்றும் சமத்துவ அமைப்புக்கான போராட்டங்களை முன்னெடுத்து மூன்று தசாப்தங்கள் வலுவான அனுபவங்களைப் பெற்றிருந்தது. தேசிய இனப் பிரச்சனையை அணுகுவதில் முற்போக்கு இயக்கம் தவறிழைத்திருந்தது; ஆயினும் தமிழ்த் தேசிய இனத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிராக ஒருபோதும் சென்றதில்லை. தமிழ்த் தேசியத்தின் வலதுசாரிப் பிரிவினர் முற்போக்கு இயக்கத்துக்கு எதிராகப் போனபோதிலும், இடதுசாரி உணர்வோடு மார்க்சியத்தை நாடிய இளைஞர் இயக்கங்கள் முற்போக்கு அணியை அரவணைத்து தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுக்க நாட்டங்கொண்டனர். ஆயினும் ஆயுதமேந்திய வலதுசாரிகள் அப்போராட்டத்தை எதிர் அனுபவத்துக்குரியதாக்கிவிட்டுள்ளனர்.
முற்போக்கு இலக்கிய இயக்கம் கோட்பாட்டு-நடைமுறை விவாதங்களினால் எழுபதுகளின் நடுக்கூறில் தேசிய கலை இலக்கியப் பேரவை தோற்றம் பெற்றிருந்தது. இவையன்றி, பிரதேச ரீதியாக இலங்கை பூராவிலும் உள்ள பல்வேறு அமைப்புகளும் முற்போக்கு கலை இலக்கியச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன. அத்தகைய அனைத்து மக்கள் சார்பான அரசியல்-பண்பாட்டுச் செயற்பாடுகளது அனுபவங்களையும் கையேற்று, இன்றைய புதிய சூழலுக்கு அமைவாக வளர்க்கப்பட்ட சிந்தனை முறை ஒன்றை வகுத்து எடுத்துக்கொள்வதற்கு இந்தப் புதிய தளத்தைக் கட்டமைத்துக் கொள்கிறோம்.
அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த சாதியத்தகர்ப்புப் போராட்ட அனுபவம் மகத்தானது(சென்ற நூற்றாண்டின் நாற்பதாம் ஆண்டுகளிலிருந்து சிறுபான்மைத் தமிழர் மகாசபை அனைத்து ஒடுக்கப்பட்ட சாதிகளையும் ஒரே அணிக்குள் கொண்டுவர இயலுமானதில் கொம்யூனிஸ்ட்டுகளின் பங்கு விதந்துரைக்கத்தக்கது; அறுபதுகளில் ஆயுதமேந்திய ஒடுக்குமுறையை ஆயுதப் போரட்டத்தால் முறியடித்து சாதியத் தகர்ப்புப் போராட்டத்தைத் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முன்னெடுப்பதற்கும் கொம்யூனிஸ்ட் கட்சியே தலைமையளித்தது). இப்போராட்டங்களின்போது ஆளும் சாதி நலம் ஒன்றையே மனங்கொண்ட தமிழ்த் தேசியம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே செயற்பட்டதிலிருந்து எமது தேசியம் ஆளும்-ஆளப்படும் சாதிகளின் தேசியங்களாகப் பிளவுபட்டுள்ளதைக் கண்டறிந்தோம். இந்தியாவில் மிகப்பெரும் போராட்டங்கள் கொம்யூனிஸ்ட்டுகளாலும் தலித்தலைவர்களாலும் முன்னெடுக்கப்பட்ட போதிலும் சாதிமுறை குறித்த தெளிவை எட்டமுடியாது போனது. கொம்யூனிஸ்ட்டுகள் வர்க்க அமைப்புத் தகர்ந்தால் சாதி ஒழியும் என்றனர்; சாதியத்தை அவ்வகையில் குறைமதிப்பீடு செய்யக்கூடாது என்ற தலித் மற்றும் திராவிடர் இயக்கத்தினர் வர்க்க ஒழிப்புக்குறிக்கோளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தவறினர். இதன்பேறாக மார்க்சிய நிலைப்பாட்டில் சாதியமைப்பைப் புரிந்துகொள்வதில் இந்தியச் சிந்தனையாளர்களிடையே இடர்ப்பாடுகள் நேர்ந்துள்ளது.
சாதி அமைப்பு நிலப்பிரபுத்துவத்துக்கு உரியது என்கிற நிலைப்பாடே இந்தியக் கொம்யூனிஸ்ட்டுகள் பலரிடம் காணப்படும் கருத்தோட்டமாகும். நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்சமாயே இன்றும் காணப்படும் சாதி இருப்பைக் கருதுகின்றனர். இந்தக் கண்ணோட்டம் உள்ளவரை எமது சமூகத்தைப் புரிந்துகொள்ள இயலாதவர்களாயே இருப்போம். இதன் பேறாகவே அங்கு தலித் இயக்கங்களும் சாதியக் கட்சிகளும் செல்வாக்குப் பெறக்கூடியதாகிறது. ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளது கோரிக்ககளைக் கொம்யூனிஸ்ட் கட்சி தனதாக்கிக் கொண்டு பாட்டாளிவர்க்கச் சிந்தனை அடிப்படையில் போராட்டங்களை முன்னெடுக்காத போது சாதிக் கட்சிகள் செல்வாக்குப் பெறுவது தவிர்க்க இயலாததாகும். ஒவ்வொரு சாதியிலுமுள்ள சுரண்டலாளர்களே சாதியக் கட்சிகளைக் கட்டியெழுப்புகின்றனர். பலநூறு வருடங்களாய்ப் பண்பாட்டு ஒடுக்கு முறைக்குட்படுத்தப்பட்டுச் சுரண்டப்பட்டு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களதும், அவர்களது வாழ்க்கை நிலையை ஒத்துள்ள பிற்படுத்த சாதி மக்களதும் கோரிக்கைகளைக் கொம்யூனிஸ்ட் கட்சி தனதாக்கிப் போராடும்போது சுரண்டலாளர்களான சாதித் தலைவர்கள் அவ்வச் சாதி மக்களால் நிராகரிக்கப்பட இடமேற்படும்.
இவ்வகையில் இரட்டைத்தேசிய நிலை ஏற்பட இடமின்றி ஒட்டுமொத்த விடுதலைக்குறிக்கோளைத் தமிழ்த் தேசியம் முன்னிறுத்த இயலுமாயிருந்ததற்கு கொம்யூனிஸ்ட்டுகள் ஒடுக்கப்பட்ட மக்களது சாதிய இழிவுகளுக்கு எதிரான போராட்டத்தைத் தலைமையேற்று முன்னெடுத்தமையே காரணமாகும். சாதிப்பிரச்சனையல்ல, வர்க்கப் போராட்டம் மட்டுமே எமது அக்கறைக்குரியது என்றிருந்திருப்பின், அறுபதுகளில் யாழ்ப்பாணத்தில் தலித்பௌத்தர்கள் என்ற புதிய சக்தி தோற்றம் பெறுவதைத் தவிர்த்திருக்க இயலாது போயிருக்கும். அத்தகைய தலித் தேசியம் எதிர்நிலை கொண்டிருப்பின் தமிழ்த் தேசியம் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் என்பதைச் சொல்லித் தெரிந்து கொள்ளும் அவசியமில்லை. இன்று பிரித்தாளும் பேரினவாத தந்திரோபாயத்துக்கு இடைவெளி ஒன்று ஏற்பட்டுவருவதும் கவனிப்புக்குரியது. இதுகுறித்து ஆளும் சாதித் தேசியத்தை முன்னெடுக்கும் தமிழ்த் தேசியர்கள் அக்கறை கொள்ளப்போவதில்லை. மார்க்சியத்தைத் தத்துவார்த்த ஆயுதமாக ஏற்றுள்ள நாமே விடுதலை பிளவுபடாதது என்ற குறிக்கோளுடன் இரட்டைத்தேசிய யதார்த்தத்தைப் பேசுபொருளாக்கி சரியான வடிவில் சுயநிர்ணயக் கோரிக்கை வடிவம்பெற ஆவன செய்தல் வேண்டும். அதற்கு அமைவாக சாதிகுறித்த சரியான புரிதலை முன்வைப்பது அவசியமாகின்றது.
சாதித் தகர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட வாய்ப்பான எமது சூழல் காரணமாக கைலாசபதி, சிவத்தம்பி, ஏ.ஜே.கனகரட்னா போன்ற சிந்தனையாளர்கள் சாதிமுறை குறித்த புரிதல் கொள்ளக்கூடிய இடத்துக்கு எம்மை இட்டுவந்துள்ளனர். இந்தியச் சிந்தனையாளர்களும் பல தெளிவுகளை எமக்கு ஏற்படுத்தியிருந்தபோதும், இரட்டைத் தேசிய வரையறை அவர்களுக்கு வரம்பிட்டிருந்தது. குறிப்பாக அம்பேத்கர் சாதி குறித்துக் காத்திரமான ஆய்வுகள் வாயிலாக பெரும் வெளிச்சங்களை ஏற்படுத்தியவர். அவரது அந்தப் பங்களிப்பை மார்க்சிய ஒளியில் மீட்டெடுத்த ஆனந்த் டெல்டும்டே, பல திறவுகோல்களை வழங்கினார்; ஆயினும் இரட்டைத்தேசியக் கோட்பாட்டுப் புரிதலின்மையால் சரியான மார்க்கத்தை வந்தடைய இயலவில்லை. சுதந்திரப் போராட்டத்தில் ஏராளமான தலித் மக்கள் பங்கெடுத்திருந்தபோதிலும், எப்போதுமே தலித் தேசியம் ஏகாதிபத்தியச் சார்பு கொள்ளும் வகையிலேயே ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் நடந்துகொள்கின்றனர் எனக் கூறுகிறார். உண்மையில் தலித் மக்களை அன்று வென்றெடுத்திருந்த காந்தி தலைமையிலான அரைத் தாராளவாத பிராமணத்தேசியம் தலித்மக்களது கோரிக்கஒகளைக் கவனம் கொண்டிருப்பின் பிந்திய தலித் எழுச்சிக்குத் தேவை இருந்திருக்காது. அதற்கு அவர்கள் மார்க்சியர்கள் இல்லையே? மார்க்சியரான ஆனந்த் டெல்டும்டேயும் இரட்டைத் தேசியக் கோட்பாடின்மையால் கடந்த காலத்தையே தவறாகப் புரிதல் கொள்கிறார்; பின்னர், எதிர்கால மார்க்கத்தை எப்படி சரியாக முன்வைக்க இயலும்?
எமது மண்ணில் சாதியத் தகர்ப்புப் போராட்டம் முனைப்படைந்திருந்தபோது, அதன் ஒளியிலிருந்து கைலாசபதி தமிழர் சமூகத்தின் வரலாற்றுச் செல்நெறி குறித்து ஆழமான முடிவுகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார். "பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்", "ஒப்பியல் இலக்கியம்", "அடியும் முடியும்" போன்ற நூல்கள் இது தொடர்பில் ஆழமான கற்றலுக்குரியன. வீரயுகத்தில் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற முழக்கத்தோடு முன்னேறிய மருதத்திணை ஏனைய திணைகளை வெற்றிகொண்டு அரசுருவாக்கத்தைச் செய்துகொண்டமையைக் காட்டியவர், தொடர்ந்த வணிக ஆதரவு ஆட்சிக்கு எதிராக நிலப்பிரபுத்துவ ஆட்சியை வெற்றிகொள்ள வெள்ளாள நிலப்பிரபுக்கள் மேற்கொண்ட வர்க்கப் போராட்டமே பக்திப்பேரியக்கம் எனக் காட்டியிருந்தார். அந்தவகையில் ஆதிக்கம்பெறும் வர்க்க இருப்பில் சாதி அமைவதை மட்டுமன்றி, சமூக மாற்றத்தில் பண்பாட்டுப் புரட்சியின் பங்களிப்பையும் காட்டியுள்ளார்.
இன்று பல்வேறு போராட்ட வடிவங்களைப் பிரயோகித்து மகத்தான பல அனுபவங்களைப் பெற்றுள்ளோம்; ஆயுதப் போராட்டத்தை அதியுச்சமான யுத்தமாகவும் முன்னெடுத்து மீள்பார்வைகளை அதன்மீது செலுத்திவருகிறோம். அவற்றோடு பண்பாட்டுப் புரட்சிகள் வாயிலாகவே எமக்கான சமூக மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளன என்ற வரலாற்று அனுபவத்தையும் கவனம் கொள்ளவேண்டியவர்களாயுள்ளோம். வடக்கில் ஏற்றத் தாழ்வு அமைப்பு உருவாகி நிலக்கிழார்களின் கீழ் வர்ணக் கோட்பாட்டு உதவியுடன் பிராமண ஆதிக்க சமூகக் கட்டமைப்பு நிலவியபோது வைசியர்களான வணிகர்களை மேலான வர்ணமாகக் காட்டவல்ல கருத்தியல்களான பௌத்த-சமணப் புரட்சி சமூக மாற்றத்தைச் சாத்தியமாக்கின. பிராமண மேலாதிக்கம் அப்போது வீழ்த்தப்பட்டபோதிலும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் இருந்த நிலப்பிரபுத்துவச் சாதிகளை அணிதிரட்டி, அந்தச் சாதிகளுக்கும் புனிதக் கற்பிதங்களைப் புனைந்து பிராமணியம் மீளுருவாக்கம் பெறத் தடை இருக்கவில்லை. தமிழகத்தில் பக்திப்பேரியக்கம் வாயிலாக அதிகாரம் பெற்ற வெள்ளாளர்கள் பிராமணர்போல தண்டனை விலக்களிக்கப்பட்டமையைக் கைலாசபதியும் காட்டியுள்ளார்.
ஆக, பண்பாட்டுப் புரட்சியின் அவசியத்தை உணர்ந்தவர்களாயும் இந்த அமைப்பை முன்னெடுக்க முனைகிறோம். இதனை ஏற்க இயலாதவர்கள் தமது ஏற்புக்குரிய போராட்ட வடிவங்களைத் தமது அமைப்பின் வேலைத்திட்டமாக வைத்தவாறே, பண்பாட்டுத்தளத்தில் சேர்ந்து இயங்க வாய்ப்பான அளவுவரை இணைந்து இயங்கத்தடை இல்லை. அதற்கு அமைவான வெகுஜன அமைப்பாகவே புதிய பண்பாட்டுத் தளம் அமையும். இதன் வடிவம், கோட்பாட்டுநிலை, செயற்பாட்டுமுறை என்பன குறித்து கூட்டு விவாதங்கள் வாயிலாக எதிர்காலத்தில் முடிவுகளுக்கு வருவோம். எந்தத் தனி நபர் விருப்பு வெறுப்புச் சார்ந்தில்லாத, உண்மையான மக்கள் இயக்கமாக இதனை வடிவமைப்போம். "மக்கள், மக்கள் மட்டுமே வரலாற்றின் உந்து சக்தி" என்ற புரிதலுடன் இயங்குவோம். மக்களே வரலாற்றைப் படைக்கிறார்கள் எனக் கூறிவிட்டு, மக்கள் புரட்சிக்குத் தலைமை தாங்கியவர்கள் பின்னால் அதன் வாய்ப்பைவைத்து தாமே தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பதும்-செயற்படுவதும் என்ற தவறு ஏற்படாத வகையில் மக்கள் அமைப்புக்குரிய பண்புகளுடன் இதனைக் கட்டமைப்போம்.
இவ்வாறு தலைவர்களாவோர் பின்னால் தன்முனைப்புக்கொண்டு தாம் இட்டதே சட்டம் என இயங்குவது ஏன்? அவ்வாறு நேராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? பாட்டாளி வர்க்கத் தலைமை அவசியம்; எந்தநிலையிலும் சிறுமுதலாளி வர்க்க அற்பத்தனங்களுக்கு ஆட்படாமல், விமர்சனம்-சுயவிமர்சனத்தை முன்னெடுப்போம். கூடவே கூட்டுத் தலைமை அமைப்பாக எமது கட்டமைப்பை வடிவமைப்போம்.
இந்த இடத்தில்தான் எமது "புதிய பண்பாட்டுத் தளம்(புதிய பண்பாட்டுக்கான வெகுஜன அமைப்பு)" ஏன் மலையகத்தில் தொடங்கப்படுகிறது என்பதற்கான பதில் அடங்கியுள்ளது. இலங்கையிலேயே தொழிலாளர்கள் மிகப் பெரும்பான்மையாகச் செறிந்துள்ள பகுதி மலையகம். முப்பதுகளில் மலையக மக்களுக்குத் தலைமை தாங்கிய நடேசையரும் மீனாட்சியம்மாளும் மிகச்சிறந்த தலைமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தனர். அவர்கள்தான் முதன்முதலில் சிங்களப் பேரினவாதம் அச்சுறுத்தலாய் வளர்வதை இனங்கண்டனர்; அதற்காக இனவாதத்திற்கு இடங்கொடுக்காது, சிங்கள முற்போக்கு சக்திகளோடு வலுவான ஐக்கியத்தை ஏற்படுத்த விடாமுயற்சி மேற்கொண்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய விஸ்த்தரிப்பு வாதத்துக்கு இடமளிக்காது இந்த மண்சார்ந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். பின்னாலே இளஞ்செழியனும் தொழிலாளிவர்க்க நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக முற்போக்கான இடதுசாரித் தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பதற்கு உதாரணமிக்க தலைவராக வாழ்ந்து காட்டினார்; அவரும் சிங்கள முற்போக்கு சக்திகளுடன் வலுவான ஐக்கியமுன்னணி ஏற்படுத்துவதற்கு அயராது உழைத்தவர் என்பதறிவோம். இவற்றுக்கான அடிப்படை மலையகத் தொழிலாளர்களின் தலைவர்களாக இவர்கள் காணப்பட்டார்கள் என்ற புரிதல் அவசியமாகும்.
அத்தகைய தொழிலாளி வர்க்க நிலைப்பாட்டில் உறுதியாக முன்னேற வேண்டும் என்ற திடங்கொள்வதற்காகவே அட்டனில் இந்த அமைப்பின் அங்குரார்ப்பணத்தை மேற்கொள்கிறோம். கொம்யூனிஸ்ட்டுகளது உறுதியான தலைமை மலையத்தில் காணப்பட்ட எண்பதுகள்வரை மலையகம் ஆளுமையோடு இருந்துள்ளது. முற்போக்கு புத்திஜீவிகள் எல்லாவகையிலும் மலையகத் தொழிலாளர்களின் புத்திரர்களாகத் திகழ்ந்தார்கள். எண்பதுகளுக்குப் பிந்திய உலகமயமாதல் சூழல் புதிதாக எழுச்சியுற்ற புத்திஜீவிகளை மலையகத் தொழிலாளர்களிலிருந்து அந்நியப்படுத்தியிருந்தது. இதனால் ஏற்பட்ட பலவீனங்களை அறிவோம்; மீண்டும் தொழிலாளர்களின் புத்திரர்கள் எனும் உணர்வுகொள்ளும் புரட்சிகர புத்திஜீவிகளை தொழிலாளர்களும் அணிதிரட்டப்படும் எமது அமைப்பினால் உருவாக்கும்வகையில் எமது செயற்பாடுகளைக் கட்டமைப்போம். அனைத்து வகைகளிலும் புதிய பண்பாட்டாளர்களாய் எம்மைப் புடமிட ஏற்ற வேலைத்திட்டத்தைக் கண்டடைவோம்.
இந்தத் தொழிலாளிவர்க்கக் குணாம்சத்தைச் சிறுமுதலாளிவர்க்கப் பண்பு மேவியுள்ள ஏனையபகுதிச் செயற்பாட்டளர்கள் வந்தடையப் புதிய பண்பாட்டுத் தளம் தன்னாலான பங்களிப்பை நல்கும். எமது அங்கத்தவர்கள் தன்முனைப்புக்கு மேலாக சமூக உணர்வை முன்வைப்பவர்களாக இருப்பர்; முழு நாட்டின் நலனுக்கு உட்பட்டதாக அவரவர் பிரதேச நலத்தைக்கருதி அதன் மேம்பாட்டுக்காகப் போராடுவோம்; புத்திஜீவிகள் தொழிலாளிவர்க்க உணர்வை வரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவர்; நீண்டகால நோக்கிற்கு பாதகம் விளைக்காத உடனடிக் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவோம்; நாம் தொடக்குனர் என்றபோதிலும் மக்களே வரலாற்றைப் படைப்பவர்கள் என்பதில் எப்போது தெளிவுடையவர்களாய் இருப்போம்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)