இலங்கை கல்விச்
சமூக சம்மேளனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் நூல்
விமர்சனமும் வெண்கட்டி பத்திரிகை அறிமுகமும் என்ற நிகழ்வு பதுளையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர்
ஆர். சங்கர மணிவண்ணன் தலைமையுரை ஆற்றுவதையும், ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் துணைப்பீடாதிபதி
வ. செல்வராஜா, சம்மேளனத்தின் ஊவா மாகாண இணைப்பாளர் திரு. எம். மதன், ஊவா வெல்லஸ்த பல்கலைக்கழக
விரிவுரையாளர் திரு. மா.ரூபவதணன், எம். எஸ்.
இங்கர்சால் ஆகியோர் உரையாற்றுவதையும் கூட்டத்தில்
கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.